இது பொன்மொழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பகுதி. இந்த பொன்மொழிகள் உங்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாகவும், உங்களது சிந்தனையை தூண்டுவதாகவும் அமையும். படித்து பயன்பெருங்கள் !
எப்பவுமே பாத்தீங்கன்னா நம்மாளுங்க பல விசயங்கள போட்டு மண்டைய ஒடச்சுக்குவாங்க, தேவை இல்லாம குழப்பிக்குவாங்க. எதிர்காலத்தப்பத்தி ரொம்ப பயப்படுவாங்க. இப்படி பண்றதால மனக்குழப்பம்தான் மிஞ்சும்.
அதுக்குத்தான் வில்லியம் ஆஸ்லர் சொல்றாரு
" உங்கள் வாழ்க்கையை தனித்தனி நாட்களாக பிரித்துக்கொள்ளுங்கள். நேற்றைய நாட்களை முற்றிலும் மூடிவிடுங்கள், நாளைய தினங்களின் கதவுகளையும் சாத்திவிடுங்கள். இன்று ஒரு நாள் மட்டும் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றிக்கொள்ளவேண்டியது இன்று ஒரு நாள் பிரச்சினை மட்டுமே. இது மிகவும் எளிது " அப்படின்னு.
நீங்களும் எழுதின தேர்வைப்பத்தியும், எழுதப்போற தேர்வைப்பத்தியும் கவலப்படறத விட்டுட்டு, இன்று என்னப் படிக்கப்போகிறோம் அப்படின்னு யோசிச்சா கண்டிப்பா வெற்றி உங்களுக்குத்தான்.
இன்னும் சில பேர் என்ன பன்னுவாங்கன்னா
விளையாட்டோ, படிப்போ இதுல தோல்வியடஞ்சுட்டா ரொம்பவே கலங்கிடுவாங்க.கலங்கிட்டா மட்டும் எல்லாம் சரியாயிடுமா என்ன
" எந்த ஒரு துரதிர்ஷ்டத்தின் விளைவுகளையும் சமாளிப்பதற்கு முதல் படி, நிகழ்ந்துவிட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் " அப்படின்னு வில்லியம் ஜேம்ஸ் சொல்றாருங்க.
![]() |
| வில்லியம் ஜேம்ஸ் |
அதனால மன உறுதிய வளர்த்துக்கோங்க, அப்பத்தான் மனப்பக்குவம் வளரும்.
உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வரும்போது, அதப் பார்த்து பயப்படாம கொஞ்சம் பல்ல கடிச்சிக்கிட்டு பொறுத்துக்குங்க, கண்டிப்பா அந்த பிரச்சினைல இருந்து விடுபட்டு விடுவீர்கள்.
" இருண்ட தினத்தை மறு நாள்வரை வாழ்ந்துவிட்டால், அந்த நாள்
தானாகவே கழிந்துவிடும் "
இத வில்லியம் கூப்பர் என்ற ஞானி கூறியிருக்காருங்க.
நார்மன் வின்சன்ட் பீல் என்ன சொல்றாரு தெரியுமா
" வெற்றியை சிந்தியுங்கள், வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள்,வெற்றியை உருவாக்குவதற்கு தேவையான சக்தி உங்களிடம் செயல்படத் தொடங்கும் " அப்படின்னு.
![]() |
| நார்மன் வின்சன்ட் பீல் |
![]() |
| டாக்டர். அப்துல் கலாம் |
நம்ம முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள்கூட இதத்தாங்க கனவு காணுங்க அப்படின்னு சொன்னாரு.
சரி கனவு காண்பதோட நிற்காம கொஞ்சம் உழைக்கவும் செய்யவேண்டும். அதுக்கு முன்னாடி சில பேர்களைப்பற்றி தெரிஞ்சுக்கலாம்.
ஆண்ட்ரூ கார்னகி இவரு பெரிய எஃகு தொழிலதிபர்
![]() |
| ஆண்ட்ரூ கார்னகி |
ராக் ஃபெல்லர் இவர் பெரிய கோடீஸ்வரர், அப்படி ஆகறதுக்கு முன்னாடி வாரத்திற்கு ஆறு டாலர்தான் சம்பளம் வாங்கினார். இன்று நீங்கள் ஃபோர்டு நிறுவன கார்களை பார்க்கிறீர்கள். சர்வதேச பிரபல நிறுவனம்.
![]() |
| ஹென்றி ஃபோர்ட் |
" வாழ்க்கையில் வெற்றிபெற ஒரே வழி கடின உழைப்பு மட்டுமே "
அதனாலதான் " காரியத்த செய்யுங்கள் சக்தி தானே வரும் " அப்படின்னு எமர்ஸன் கூறியிருக்கார்.
அதனால கடினமா உழைக்க எப்பவுமே தயாரா இருங்க !





No comments:
Post a Comment