Tuesday, November 23, 2010

தேர்வை பார்த்து பயப்படாதீங்க...!

அன்பு தோழர், தோழியரே
ஒரு பழமொழி சொல்லுவார்கள், பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று. அது போல நிறைய மாணவர்களுக்கு தேர்வை நினைத்தாலே பயம் பற்றிக்கொள்கிறது.பிறகெங்கே தேர்வை நல்லபடியாக பதற்றமின்றி எழுதுவது.

 அது ஒன்றும் பெரிய கடினமான வேலை இல்லை என்பதுதான் உண்மை.
பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள், சித்திரமும் கைப்பழக்கம்...செந்தமிழும் நாப்பழக்கம் என்று. அது எவ்வளவு பெரிய அனுபவ உண்மை என்பதை இப்பொழுது  நீங்கள் தெரிந்துகொண்டு தேர்வை சிறிதளவும் பயமின்றி எதிர்கொள்ளப்போகிறீர்கள். வெற்றி உங்கள் பக்கம் நிற்கப்போகிறது, வாழ்த்துக்கள்!
என்னங்க பண்றது, சிலபேர பார்த்தீங்கனா நல்லா பேசுவாங்க ஆனா மேடைல பேச சொன்னா  ஐயோ நமக்கு பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங்கு... பேஸ் மட்டமேல்லாம் வீக்குங்கோவ், ஆளவிடுங்க என்று நடுங்கிவிடுவார்கள். இதுக்கு காரணம் பயம் மட்டும்தான்.
நெறய மாணவர்களைப் பார்த்தீங்கன்னா நல்லா படிப்பாங்க ஆனா தேர்வ பார்த்தா மட்டும் பயப்படுவாங்க. இதுக்கு அவங்க தங்கள நம்பாததும், குறைத்து  மதிப்பிட்டுகொள்வதும் மட்டுமே காரணம்.


இதுல இருந்து நீங்க மீள சில வழிமுறைகளை சொல்லித்தருகிறேன், முதலில் நீங்கள் ஒரு திட்டத்தை வகுத்துக்கொள்ளவேண்டும். ஒன்னும்மில்லிங்க ஒரு சினிமாவுக்கு போகணும்னா கூட எவ்ளோ பெரிய திட்டம் தீட்டுறோம், தேர்வுக்கு திட்டம் தீட்டினா என்ன தப்பு. சரி என்ன திட்டம்னா ஒரு கால அட்டவணையை தயார் படுத்திக்கோங்க. அதுல எந்த பாடத்திற்கு எவ்ளோ நேரம் படிக்கணும். கஷ்டமான பாடம் எது, அதுக்கு எவ்ளோ நேரம் ஒதுக்கறது அப்படிங்கற அட்டவணை. அதே சமயம் தொடர்ந்து படிக்கணும்னு திட்டம் போடவேண்டாம்.
ஏன்னா மூளை ஒரு குறிப்பிட்ட வேலையை தொடர்ந்து செய்யும்போது எளிதில் களைப்படைந்து, அந்த வேலையின்மீதே சலிப்பை ஏற்படுத்திவிடும்.
அதனால அவ்வப்பொழுது ஒய்வு எடுத்துக்கரமாதிரி அட்டவணையை தயார் செய்யுங்க.
சின்னச்சின்ன பொழுதுபோக்கு விசயங்களில் உங்கள ஈடுபடுத்திக்குங்க. அதாவது சிறிய நடை, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, பெற்றவர்களுக்கு ஏதாவது சிறு உதவி செய்வது, வீட்டை சுத்தம் செய்வது இப்படி ஏதாவது செய்யுங்க. இது உங்களுக்கு ஒரு உடற்பயிற்சியாகவும், மன பயிற்சியாகவும் அமையும்.
அப்புறம் இன்னொரு விஷயம் நீங்க படிக்குற இடம். அது உங்க மனசுக்கு மிகவும் பிடித்த அதே சமயம் அமைதியானதா இருக்கணும். தொலைக்காட்சி, வானொலி, வாகன இரைச்சல். இப்படி உங்களுக்கு மன அமைதி கொடுக்காத விஷயங்கள் இருக்குற இடத்துல படிக்க முயற்சி செய்ய வேண்டாம்.
தேவை இல்லாத புத்தகங்கள தூக்கி தூரமா போடுங்க. பொதுவா அதிகாலை நேரத்துல படிக்கிறது நல்லது, ஏன்னா தூங்கி விழித்தவுடன், மூளை ஓய்வேடுத்துட்டதால நல்லா செயல்படும்.
படிக்கிறப்ப எப்பவுமே படுத்துக்கிட்டு படிக்கதீங்க, அப்புறம் தூக்கம்தான் வரும். படுக்கை விரிப்புகள் மீதோ, படுக்கை மீது அமர்ந்தோ ஒருபோதும் படிக்காதீங்க.
உங்க முதுகுத்தண்ட நல்லா செங்குத்தா வெச்சுக்கோங்க, அப்பத்தான் தூக்கம் வராது.
படிக்கும்போது குறிப்புகள் எடுத்து வெச்சுக்கறது ரொம்ப நல்ல பழக்கம்.






 அப்படி குறிப்புகள்
எடுத்து படிச்சா, எப்பவுமே படிச்சது மறக்காது.
படங்கள் மற்றும் பாகங்கள், கணித சூத்திரங்கள், முக்கிய குறிப்புகளை படிக்கும்போதே குறித்து வைத்துக்கொண்டால், பாடங்களை திருப்பி பார்ப்பது சுலபம்.
அப்புறம் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுங்க.

 தேவையான அளவு தண்ணீர் அருந்த மறக்காதீங்க.
ஆறுமணி நேரத்திற்கு குறைவா தூங்க வேண்டாம், அதே சமயம் எட்டு மணி நேரத்திற்கு அதிகமா தூங்கவேண்டாம்.
தேர்வுக்கு போகும்போது தயவு செய்து சாப்ட்டுட்டு போங்க, சாப்பிடாம போனீங்கனா மயக்கம்தான் வரும்.
தேர்வு எழுதும்போது, எழுதும்விதம்தான் உங்களுக்கு மதிப்பெண்ணை பெற்று தரும். முக்கியமான குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்ட மறந்துடாதீங்க. ஏன்னா விடைத்தாளை திருத்துபவர்கள் உங்களோட முழு விடைத்தாளையும் படிக்கப்போறது இல்லை , நேரம் இருக்காது அதனால முக்கிய குறிப்புகளுக்கு அடிக்கோடிடுவது மிக அவசியம்.
முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளியுங்கள், யோசிச்சு எழுதுறதெல்லாம் கடைசியாக வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுதுதான் குறித்த நேரத்தில் கால விரயமின்றி தேர்வு எழுத  முடியும்.
ஒரு முக்கியமான விஷயம், சில நேரங்களில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளும் கேட்கப்படுவதுண்டு, அதை சும்மாவாச்சும் எழுதி வையுங்கள். அந்த மாதிரியான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கி விடுவார்கள். இது எப்பொழுதாவது கவனக்குறைவாக ஏற்படும் தவறு.
தவறான வழிமுறைகளை எப்பொழுதும் கடைபிடிக்காதீர்கள்.
தேர்வு எழுதிய பின்பு அதைப்பற்றி பேசிக்கொண்டோ கவலைப்பட்டுக்கொண்டோ  இல்லாமல் அடுத்த தேர்வுக்கு தயாராவது சிறந்தது.

 அடுத்த பதிவில் தொடர்கிறேன் ...

No comments:

Post a Comment