உங்களது மாணவர்களின் முன்னேற்றத்திற்காக இந்த தளத்திற்கு வருகை புரிந்ததற்கு நன்றி !
இவ்வளவு தூரம் சிரமம் எடுத்துக்கொள்ளும்போதே நீங்கள் எப்படிப்பட்ட பெருந்தகையாளர் என்பது விளங்குகிறது. உங்களது முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
இந்த பகுதியில் ஆசிரியர்களுக்கு தேவையான குறிப்புகள் வழங்கப்படும். மாணவர்களின் உளவியல் பற்றியும், ஆசிரியர்களின் உளவியல் பற்றியும் ஆராயப்படும்.
" எழுத்தறிவித்தவன் இறைவன் "
ஆம் நீங்கள் இறைவனுக்கு ஒப்பாக போற்றப்படுபவர்கள். அதனால்தான் " மாதா, பிதா, குரு, தெய்வம் " என்று தெய்வத்திற்கு முன்னால் வைக்கப்பட்டு போற்றப்படுகிறீர்கள். மாதாவாகவும், பிதாவாகவும் இருக்கும் குரு, நமது தெய்வம் என்ற பொருள்படும் படியான இந்த வாக்கியம் உங்களைப் போன்ற நல்லாசிரியர்களால்தான் பிரகாசிக்கப்போகிறது.
உங்களைப்போன்ற பொறுப்பான ஆசிரியர்கள்தான் நல்ல சமூகத்தையும், பண்பாட்டையும் உருவாக்க முடியும். அதுவும் நம்மை போன்ற மனிதவளம் நிறைந்த நாட்டில் உங்களது பங்கு மிக அதிகம். ஒரு நாட்டின் கலாச்சாரமும், நாகரிகமும் அந்த நாட்டின் ஆசிரியர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
இது மிகவும் உண்மை. ஏனென்றால் ஒரு மாணவன் தனது வாழ் நாளின் முக்கிய வளர்ச்சிப் பருவத்தின் பெரும் பகுதியை ஆசிரியர்களுடன் தான் செலவிடுகிறான். ஏனென்றால் பள்ளியிலும், கல்லூரியிலும் நீங்கள்தான் பெற்றோர்.
ஒரு அறிவியல் அறி ஞன், நல்ல அரசியல் தலைவன், கலை ஞன், இப்படி ஒரு நாட்டின் முதுகெலும்பான அத்தனை துறை வல்லுனர்களும் உங்களால் தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். உங்களது மாணவர்களின் முன் மாதிரி நீங்கள்தான். ஆகவே தெய்வங்களே, நமது நாட்டின் எதிர் கால தூண்களை வலுப்படுத்த எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !

No comments:
Post a Comment