Thursday, November 25, 2010

தேர்வுக்கு எப்படி தயாராவாது...!

அன்பிற்கினிய தோழர் தோழியரே, வணக்கம் !
தேர்வுக்கு தயாராகறது ஒரு கலைங்க.
ஆனா நெறைய பேரு என்ன செய்வாங்கன்னா, விடிய விடிய படிச்சிட்டு எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிடுவாங்க. அப்புறம் யாராவது எழுப்பிவிடனும். இது அவரோட தப்பில்லைதான், இருந்தாலும் அந்த மாதிரி தவறுகளை என்னோட தோழர், தோழியரான நீங்க செய்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு...!
ஒண்ணுமே இல்லீங்க,
முதல்ல என்ன பண்றீங்கன்னா உங்க ஆசிரியர்கள்கிட்ட, நடந்து முடிந்த தேர்வுகளோட கேள்வித்தாள்கள வாங்குங்க. உங்க நண்பர்கள் ஒரு நாலஞ்சு பேர் ஒரு குழுவா சேர்ந்து, அந்த கேள்வித்தாள்களில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதுங்க. அது ஒரு தேர்வு மாதிரியே நடக்கட்டும். கிட்டத்தட்ட ஒரு மாடல் எக்ஸாம் மாதிரின்னு வேச்சுக்குவோமே. அத நீங்களே உங்களுக்குள்ளேயே ஆள் மாற்றி விடைத்தாள்கள திருத்துங்க. இது உங்களுக்கு மிகப்பெரிய பயிற்சியா இருக்கும். இதுல நீங்க நிறைய கத்துக்குவீங்க, எனவெல்லாம் கத்துக்குவீங்கன்னா ஒரு தேர்வ எப்படி எழுத கூடாது, நேரத்த எப்படி சரியான முறையில் பயன்படுத்தலாம், எந்த மாதிரி கெள்விகள கேட்பாங்க, எவ்ளோ நேரத்துல உங்களால எழுத முடியுது ... இப்படி நிறைய கத்துக்குவீங்க.
அடுத்து ஒப்புவித்தல், இது மிக அற்புதமான முறை. நீங்க உங்க நண்பர்கள்கிட்ட அல்லது ஆசிரியர்கள்கிட்ட ஒப்புவிக்கலாம். இப்படி ஒப்புவிக்கும்போது ஒரு படித்த விசயத்த மீண்டும் நினைவுகூறும்போது என்னமாதிரி தவறுகள நீங்க பண்றீங்கன்னு உங்களுக்கே புறிஞ்சுடும். அத நிவர்த்தி செய்திட்டீங்கன்னா தேர்வு எழுதும்போது நினைவு கூறுதல் விசயத்தில் தடுமாற்றம் வராது.
பொதுவா ஒரே நாளில் எல்லாத்தையும் படிச்சு முடிச்சிரனும்னு நினைக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி செய்வதன் மூலமாதான் நிறைய நேரம் படிக்க முடியும், நிறைய படிக்க முடியும்.
உங்க பாட திட்டம் என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கோங்க.
ஒவ்வொரு பாடத்தையும் கவனமா, நிதானமா படியுங்க.
துணை பாடங்களையும் கவனமா படிங்க.
படிக்கும்போது சின்னசின்ன குறிப்புகள் எடுத்து வெச்சுக்கிட்டு படிச்சிங்கன்னா, திருப்பி பார்க்கரறது சுலபம் அதாவது ரிவிஷன் பண்றது.
இந்த குறிப்புகள் தேர்வு எழுதும் முன் திருப்பி பார்க்கறதுக்கு ரொம்ப உதவிகரமா இருக்கும்.
ஒரு பாடத்த எடுத்துக்கிட்டீங்கன்னா, அத முழுசா தெளிவா படிச்சு அதோட அடிப்படைய ஆழமா புரிஞ்சுக்கோங்க. எப்படீன்ன அந்த பாடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விளக்கங்கள், சூத்திரங்கள், சொல்லியல், படங்கள், பாகங்கள், சமன்பாடுகள், தேற்றம், வகைப்பாடு ... இப்படி மிக முக்கியமான செய்திகளை மிக கவனமாக கிரகித்துக் கொள்ளுங்கள்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் படிக்கும் பாடத்துடன் தொடர்புடைய துறை சார்ந்த அறிவை நீங்கள் நன்றாக வளர்த்துக்கொள்ள வேண்டும் . இதற்கு நவீன தொழில்நுட்பம் உதவும்.
மேலும் உங்க துறை சார்ந்த பயிற்சி பட்டறைகள் மற்றும், ஆய்வரங்கங்களில் நீங்கள் பங்கேற்க வேண்டும்.

எதை படித்தாலும் எழுதி பார்த்துவிடுவது மிக நல்ல பயிற்சி.
இந்த பயிற்சி உங்களுக்கு எப்படி தேர்வு காலத்தில் உதவும் என்றால், உங்களால் தரவை வேகமாகவும் தெளிவாகவும் அழகாகவும் எழுதமுடியும். வார்த்தைகளை மிகச்சரியாக கோர்த்து படிப்பவர்களுக்கு எளிமையாக புரியும் வாக்கியங்களை எழுத முடியும்.
கேள்விகளுக்கு பதில் எழுத, உங்களுக்கு தேர்வு துணைவன் எனப்படும் கைடுகள் மற்றும் பாடப்புத்தகங்கள் உதவும். மேலும் உங்கள் பாடத்தை நன்றாக புரிந்துகொள்ளவும் இவைகள் உதவும்.
சில பாடங்கள் மிகவும் சிரமமாக இருப்பது போலவும் புரியாதது போலவும் இருக்கும். ஆனால் அப்படி இல்லை. அந்த பாடத்திற்கு நீங்கள் புதுசு அவ்வளவுதான். இப்போ நீங்க ஒரு ஊருக்கு போறீங்க அப்படின்னு வெச்சுக்குவோம். போன உடனே அந்த ஊரின் அத்தனை வழிகளும் உங்களுக்கு பழகிவிடுமா இல்லையே ஆனால் பாருங்க கொஞ்ச நாள் போச்சுன்னா நீங்க மத்தவங்களுக்கு வழி சொல்லுவீங்க. சிறிது நாட்களில் பழகிவிட்டது அவ்ளோதான். அதே மாதிரிதான் கொஞ்ச நாள் கவனம் செலுத்தினா போதும், கஷ்டமான பாடமெல்லாம் உங்களிக்கு தூசி மாதிரி ஆயிடும்.அதுக்கு என்ன பண்ணனும்னா
கஷ்டமான பாடத்த அடிக்கடி திருப்பி பாருங்க
பாடத்திற்கும் பாடத்தில் உள்ள முக்கிய தலைப்புகளுக்கும் உள்ள தொடர்பை கவனியுங்க பாடம் புரிந்துவிடும்
தொடர்ந்து படிக்கும் பழக்கம் எப்படி வரும் தெரியுமா, மொதல்ல வாரத்துக்கு ஆறு மணிநேரம் படிங்க சில வார பயிற்சியில் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் படிக்ககூடிய அனுபவமும் பயிற்சியும் உங்களுக்கு வந்துவிடும்
சந்தேகம் வந்தா உடனே கேளுங்க தோழர், தோழியரே .....வாழ்த்துக்கள் !
மீண்டும் அடுத்த பதிவில்...!



No comments:

Post a Comment