Sunday, November 21, 2010

மாணவர்களுக்கான பகுதி...!

அன்பு தோழர், தோழியரே
வணக்கம் !
இது உங்கள் பகுதி . உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்க காத்திருக்கிறோம். கேளுங்கள் பதிலளிக்கிறோம் !

இன்று உங்களுக்கு, உங்களது தோற்றத்தை வளப்படுத்திக்கொள்வது  பற்றி கற்றுத்தரப் போகிறேன்.
தோற்றம் ஒரு மனிதனை பற்றி மற்றொரு மனிதனுக்கு உணர்த்தக்கூடிய பண்பை பெற்றது.
இவன் மோசமானவன், நல்லவன், கோமாளி, பயந்தான்கொள்ளி, வீரன், அப்பாவி, திருடன், இப்படி ஒருவன் தோற்றத்தை கொண்டுதான் மற்றவர்கள் அவனை கணிக்கிறார்கள்.
ஆகவே உங்களது தோற்றத்தை பளிச்னு வெச்சுக்க சில யோசனைகள் !

முதலில் நீங்கள் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும், அனால் அதில் ஒரு விறைப்புதன்மைய காட்டாதீங்க. நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வைன்னு நம்ம பாரதியார் சொல்லியிருக்கார் இல்லையா, அதுமாதிரி.

உடலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்துங்கள். சிரமப்பட்டு உய்ர்த்தாதீங்க. நீங்க அப்படி உஅர்த்தும்போது உங்க உடல் எடைய உணரக்கூடாது, அதுமாதிரி அப்படி லேசா உயர்த்தணும்.

நடக்கும்போது சிரமப்படாமல் அடிகளை நிதானமாக வைத்து நடக்கணும்.

அப்படி நீங்க நடக்கும்போது, உங்க நிதான நடை, உங்களது தன்னம்பிக்கைய வெளிப்படுத்துற மாதிரி இருக்கணுமே தவிர தலைக்கணத்த வெளிப்படுத்துற மாதிரி இருக்கக்கூடது.புன்முறுவலையும் செர்த்துக்கிட்டீங்கன்னா உங்க தோற்றம் மேலும் வசீகரமாகிவிடும்.

எப்பவும் சுத்தமான உடைகளை மட்டும் அணியுங்கள். உடைகள் ரொம்ப முக்கியம். அதைப்பற்றி பின்னாடி பார்க்கலாம்.

ஒருமுறை பயன்படுத்திய உடைகளை, துவைத்த பின்னர் தான் மறுபடியும் பயன்படுத்தவேண்டும்.

தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். ஏன் என்றால் நமது நாடு வெப்ப நாடு. நெறைய வியர்க்கும். அதனால்தான் பெரியவர்கள் " கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழானாலும் குளித்துக்குடி " அப்படின்னு சொல்லியிருக்காங்க.

அப்புறம் நாகரிகம் அப்படிங்கற பேர்ல கண்டபடி முடிய வளர்த்துக்காதீங்க. நீங்க நல்ல மாணவரா இருந்தாலும் உங்க மேல தப்பான அபிப்பிராயம் வந்துவிடும்.

இப்படித்தான் சமர்த்தா இருக்கணும் 
விரல் நகங்களை வாரம் ஒரு முறை சீர் செய்துவிடுங்க.
காலணிகள சுத்தமா பளிச்னு வெச்சுக்கணும்.










 இப்படி எல்லாம் சுத்தமா இருந்தாதான் உங்க தோற்றமும் நீங்களும் பளிச்னு இருப்பீங்க. 






No comments:

Post a Comment